சிறீலங்காவை விட்டு வெளியேறுகின்றார் சந்திரிகா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளிநாட்டில் சென்று குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக சந்திரிகா செயற்பட்டிருந்தார். அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட விவகாரத்திலும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தார்.

இதன் காரணமாக அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகி வெளிநாட்டில் குடியேற சந்திரிகா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.