Tamil News
Home செய்திகள் சட்டத்தை மீறிய 3076 பேர் இதுவரையில் கைது.

சட்டத்தை மீறிய 3076 பேர் இதுவரையில் கைது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவற்றுள் 3 முச்சக்கர வண்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version