கோர விபத்து! பலர் பலி..

ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹேர பகுதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த வான் மரத்துடன் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.