Tamil News
Home செய்திகள் கொழும்பில் தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தல் தொடர்பான குற்றவாளிகளுக்கு எதிராக...

கொழும்பில் தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தல் தொடர்பான குற்றவாளிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு

கொழும்பில் தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தல் தொடர்பான குற்றவாளிகளுக்கு எதிராக வழங்கப்கொழும்பில் கடந்த 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் இருவரையும் விடுதலை செய்ய முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்படி மாணவர்களை வெள்ளை வானில் கடத்தி தடுத்து வைத்திருந்து காணாமல் ஆக்கிய வழக்கில் பிரதான சந்தேக நபரான கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் இருக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி, பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியான ரவீந்திர விஜயகுணரத்ன ஆகிய இருவரையும் விடுதலை செய்ய முடியாது என்றும் இவர்களின் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இருப்பதாகவும் நீதிவான் ரங்க திசநாயக்க சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கு நேற்று(13) கோட்டை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது பிணையில் உள்ள சந்தேக நபர்களான லக்சிறி அமரசிங்க என்னும் தென்னந்தோப்பு உரிமையாளரும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் முன்னிலையாகியிருந்தனர்.

லக்சிறி அமரசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிசும், ரவீந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் முன்னிலையாகியிருந்தனர். சி.ஐ.டி சார்பாக அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர முன்னிலையாகியிருந்தார்.

இந்த இரண்டு குற்றவாளிகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை தொடர்பாக விசாரித்த பின்னரே தீர்மானம் எடுக்க முடியும். எனவே இந்த வழக்கை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

Exit mobile version