Tamil News
Home உலகச் செய்திகள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தடை – அமெரிக்கா அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தடை – அமெரிக்கா அறிவிப்பு

கோவிட்-19 வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை அதிகம் பாதித்துவருவதால் ஐரோப்பியா நாடுகளுக்கான பயணத்தடையை அமெரிக்கா அறிவித்துள்ளது.

எனினும் இந்த பயணத்தடையில் பிரித்தானியாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறும் அமெரிக்கா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நேற்று (11) அமெரிக்காவில் இடம்பெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின் பின்னரே அமெரிக்க அதிபர் டொனால்ட் றம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதிகமாக மக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு அமெரிக்க மக்களை தான் கேட்டுக்கொள்வதாகவும், அமெரிக்கா மிகப்பெரும் பொருளாதார வளம் கொண்ட நாடு எனவே நாம் இந்த வைரஸ் கிருமியை எதிர்த்து போரிடுவது கடினமல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version