Tamil News
Home செய்திகள் எதிர்க்கட்சி தலைவராக சஜித்;சபாநாயகர் அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவராக சஜித்;சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச சபாநாயகர் கரு ஜயசூரியவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

8வது பாராளுமன்றத்தின் 4வது அமர்வு இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியதுடன் ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தொடர்ந்து பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பின்னர் மீண்டும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போது எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version